நாட்டின் முன்னணி கால்பந்து தொடர்களில் ஒன்றான தூரந்த் கோப்பை தொடரின் 132-வது சீசன் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியாழனன்று நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் கோவா - மோகன் பகான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி ஈஸ்ட் பெங்கால் அணியுடன் இறுதி ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.